ஆண்மை தவறேல் – 23

(Tamil Sex Stories - Aanmai Thavarael 23)

Raja 2013-12-05 Comments

“பெயிண்டிங்க்ஸ்லாம் பிடிச்சிருக்கா அசோக்..?” பின்னால் இருந்து கேட்ட குரலுக்கு,

“மார்வலஸ்..!!”

என்று உடனடியாய் பதில் சொல்லிவிட்ட அசோக், அப்புறந்தான் தன்னை யார் பேர் சொல்லி அழைப்பது என்று ஆச்சரியமானான். அந்த ஆச்சரியத்துடனே உடனடியாய் திரும்பி பார்த்தான். திரும்பியவன் ஓரிரு வினாடிகள் அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனான். எதிரே அவன்.. நெற்றிக்கு சந்தனமும்.. கண்களுக்கு கண்ணாடியும்.. உதட்டுக்கு புன்னகையையும் கொடுத்தவாறு.. புருஷோத்தமன்..!!!!

“டேய்.. புருசு..!!!!” அசோக் உற்சாகமாக கத்தினான்.

“அசோக்..!!” புருஷோத்தமனும் முகமெல்லாம் மலர்ச்சியும் சிரிப்புமாய் சொன்னான்.

“எ..எப்படிடா இருக்குற..??”

“நான் நல்லா இருக்கேன் அசோக்.. நீ எப்படி இருக்குற..?”

“நல்லா இருக்கேண்டா..!! சென்னைக்கு எப்போ வந்த..?”

“மூணு வருஷம் ஆச்சு..!!”

“வாட் எ சர்ப்ரைஸ் மேன்..?? பாத்து எவ்வளவு நாளாச்சு..??”

“ம்ம்.. ஒரு ஆறு வருஷம் இருக்குமா..?? காலேஜ் லாஸ்ட் டே அன்னைக்கு பாத்தது.. அப்புறம் கொஞ்ச நாள் ஃபோன்ல காண்டாக்ட் இருந்தது.. அப்புறம் நீ யூ.எஸ் போனப்புறம் அதுவும் கட் ஆயிடுச்சு..!!”

“ம்ம்.. ஆமாண்டா..!! ஐ கான்ட் பிலீவ் திஸ்.. உன்னை இங்க மீட் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!! ஆமாம்.. நீ எப்படி இங்க..??”

“ஹாஹா..!! அதை நான் கேக்கனும்டா..!! நீ எப்படி இங்க..??”

“நா..நான்.. இங்க ஒரு.. ஆங்.. பிசினஸ் சம்பந்தமா ஒருத்தரை மீட் பண்ண வந்தேன்.. அப்படியே சும்மா வேடிக்கை பாக்கலாமேன்னு உள்ள வந்தேன்..”

“ஓ..!! பிசினஸ்னா.. அப்பாவோட பிசினஸா..??”

“ம்ம்.. அதேதான்..!! சரி.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்குறேன்னு சொல்லு..!!”

“நானும் பிசினஸ்தான்..!! ஐ’ஆம் ஹியர் ஃபார் செல்லிங் ஆல் தீஸ்..”

“பு..புரியலை..”

“இதெல்லாம் என்னோட பெயிண்டிங்க்ஸ்டா..” புருஷோத்தமன் சொல்ல அசோக் ஆச்சரியத்தில் திளைத்தான்.

“ஹேய்.. வெ..வெளையாடாத..”

“ஹாஹா.. நான் ஏண்டா வெளையாடபோறேன்..? நெஜமாவே இதெல்லாம் நான் வரைஞ்சதுதான்..!!”

“அ..அப்போ.. நீதான் புனிதாவா..?? ரீசண்டா குமுதம் ஆனந்த விகடன்ல..??”

“ம்ம்.. நானேதான்..!!”

“மை காட்.. நீதான் அந்த பாப்புலர் புனிதாவா..??”

“ஹாஹா.. ஆமாண்டா..!!”

“ஓ.. மேன்.. ஐ கான்ட் பிலீவ் திஸ்..!! ஆமாம்.. அது என்ன புனிதா.. உன் புனைப்பேரா..?”

“ஹாஹா.. இல்ல.. என் வொய்ஃபோட பேரு..”

புருஷோத்தமன் சொல்ல அசோக் அடுத்ததாய் ஒரு அதிர்ச்சிக்கு போனான். ‘என்ன சொல்கிறான் இவன்..???’ என்று ஒருகணம் குழம்பினான். அந்த அதிர்ச்சியும், குழப்பமுமாகவே புருஷோத்தமனிடம் கேட்டான்.

“வொய்ஃபா..?? க..கல்யாணம் ஆயிருச்சா உனக்கு..??”

“ம்ம்.. ஆயிடுச்சே..!! ஒன்றரை வருஷம் ஆகுது..!!”

“எப்படிடா..??”

“எப்படின்னா.. எல்லாருக்கும் மாதிரிதான்..!! இன்விடேஷன் அடிச்சு.. ஊரெல்லாம் கூட்டி.. தாலி கட்டி.. மாலை மாத்தி..!!”

“ஹேய்.. காமடி பண்ணாத..!!”

“பின்ன.. நீ கேக்குறது அப்படித்தான் இருக்குது..”

“அதுக்கில்லடா.. உனக்குத்தான் காதல், கல்யாணம் இதெல்லாம் பிடிக்காதே..?”

“ஓ..!! அ..அது அப்போ.. காலேஜ் படிக்கிறப்போ..!! இப்போ அதுதான் எல்லாம்னு ஆயிட்டேன்..!!” சிரித்தவாறே புருஷோத்தமன் சொல்ல, அசோக்கிற்கு அந்த வார்த்தைகளை நம்ப மிகவும் கடினமாக இருந்தது.

“காதல் ஒரு பாவச்செயல்.. கல்யாணம் ஒரு பெருங்குற்றம்.. அப்டின்லாம் சொன்னியேடா..!!”

“அடப்பாவி.. அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்குற நீ..??”

“அதெப்படிடா மறக்குறது..??”

“ம்ம்.. அது அப்போ ஏதோ.. உலகம் புரியாத வயசுல உளருனது..!! வேணுன்னா.. அதை அப்படியே இப்போ மாத்தி சொல்லவா..??”

“எப்படி..??”

“காதல் ஒரு புனிதச்செயல்.. கல்யாணம் ஒரு புண்ணிய வாசல்..!! எப்படி இருக்குது..?? ஹாஹா..!!”

“ஹேய்.. சிரிக்காதடா.. !! சொல்லு.. என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!”

“என்ன தெரிஞ்சாகனும்..??”

“எப்படி நீ இப்படி மாறினேன்னு எனக்கு தெரிஞ்சாகனும்..”

அசோக்கின் முகத்தில் தெரிந்த சீரியஸ்னஸ் பார்த்ததும் புருஷோத்தமன் சற்றே நிதானித்தான். கொஞ்ச நேரம் அசோக்குடைய கண்களையே கூர்மையாக பார்த்தான். ஒருமுறை அந்த ஹாலை சுற்றும் முற்றும் பார்த்தவன், அப்புறம் புன்னகை தோய்ந்த உதடுகளுடன் சொன்னான்.

“வா.. அப்படி வெளில போயிறலாம்..”

அசோக்கும் புருஷோத்தமனும் அந்த ஹாலை விட்டு வெளியே வந்தார்கள். ரிசப்ஷனை கடந்து பக்கவாட்டில் தெரிந்த பாதையில் நடந்தார்கள். ஹோட்டலுக்கு பின்புறமாக இருக்கும் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து செல்லும் வழி அது. கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததுமே அசோக்கிற்கு புகைக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் பாக்கெட்டை எடுத்தவன், முதலில் புருஷோத்தமனிடம் நீட்டினான்.

“இல்லடா.. நான் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்..” புருஷோத்தமன் மறுக்க,

“நெஜமாவா..??” அசோக் ஆச்சரியமானான்.

“ம்ம்..”

“தம்மு மட்டுந்தானா.. இல்ல.. தண்ணியுமா..??”

“ஹாஹா.. எல்லாம் விட்டாச்சுடா..!!”

“அடப்பாவி..!! தயவு செஞ்சு ‘என் பொண்டாட்டி விட சொன்னா.. அதான் விட்டுட்டேன்..’னு மட்டும் சொல்லிடாத.. என்னால தாங்கிக்க முடியாது..!!”

“அப்போ நான் ஏதாவது புதுசா பொய் கண்டுபிடிச்சுதான் சொல்லணும்..!! ஹாஹா..!!”

சொல்லிவிட்டு சிரித்த புருஷோத்தமனையே அசோக் வித்தியாசமாக பார்த்தான். அப்புறம் சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் உருவி உதட்டில் பொருத்திக் கொண்டான். அதன் முனைக்கு நெருப்பு வைத்து, ஆழமாக புகையை இழுத்து வெளியே விட்டான். ஒரு ஐந்தாறு வினாடிகள் நீடித்த மௌனத்தை கலைத்தவாறு கேட்டான்.

“சொல்லு புருசு.. அப்படி இருந்த நீ, எப்படி இப்படி மாறுன..?”

அசோக் கேட்க, புருஷோத்தமன் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். அப்புறம் அவனது பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டான். கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி, பாக்கெட்டில் இருந்த கர்சீப் எடுத்து அதை துடைத்தவாறே, மெல்லிய குரலில் ஆரம்பித்தான். Sunni Tamil Sex Stories

– தொடரும்

ஆண்மை தவறேல் – 23

What did you think of this story??

Comments

Scroll To Top