ஐ ஹேட் யூ பட் – 19

(Tamil Kamakathaikal - I Hate U But 19)

Raja 2013-10-17 Comments

Tamil Kamakathaikal – ப்ரியா கூலாக சொல்லிவிட்டு தனது பின்புறத்தை அசைத்து அசைத்து திமிராக நடந்து சென்றாள். அவள் செல்வதையே அசோக் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய மனநிலை புரியாத ஹரி..

“என்ன மாப்ள.. உன் ஆளு உன்னையே இந்த ஏறு ஏறிட்டு போகுது..??” என்று கேலியாக கேட்டுவிட,

“த்தா.. அவளை இனிமே என் ஆளுன்னு சொன்ன.. செருப்பு பிஞ்சுடும் உனக்கு..!!” என்று அசோக் கோவத்தை அவனிடம் காட்டினான்.

“ம்க்கும்.. எங்கிட்ட மட்டும் நல்லா எகிறு.. அவகிட்ட அப்படியே பம்மு..!!” ஹரியின் கேலியில் இருந்த உண்மை அசோக்கை அடங்கி போக செய்தது.

“வேற என்ன பண்ண சொல்ற..?? பவரும் கண்ட்ரோலும் அவகிட்டல இருக்கு..??” என்றான் வெறுப்பாக.

“ஹ்ம்ம்.. எல்லாம் அந்த பக்கு மண்டையன் செஞ்ச வேலை மாப்ள.. இந்த மக்கு பீஸைலாம் பாஸ் ஆக்கி.. நம்மளலாம் லூஸாக்குறான்..!!” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோவிந்த் இடையில் புகுந்து,

“அ..அப்போ இன்னைக்கு தண்ணி இல்லையா பாஸ்..??”

என்று பாவமாக கேட்டான். உடனே ஹரியும் அசோக்கும் மெல்ல தங்கள் தலையை திரும்பி, அவனை பார்த்து முறைத்தார்கள். ஹரிதான் அவனை பார்த்து காட்டமாக சொன்னான்.

“ஏண்டா.. உனக்கு கொஞ்சம் கூட சென்ஸே இல்லையா..?? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?? மனசாட்சியே இல்லாம எப்படி உன்னால இப்படி பேச முடியுது..?? உன்னல்லாம்…”

ஹரி ஏன் அவ்வளவு டென்ஷனானான் என்று புரியாமல் அசோக்கும் கோவிந்தும் விழிக்க, ஹரி இப்போது அசோக்கின் பக்கமாய் திரும்பி, வருத்தமான குரலில் சொன்னான்.

“பாரு மாப்ள இவனை.. என்ன பேசுறான்னு..!! காலைல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் போட்ருக்கோம்.. கடைசி நேரத்துல நீ வர முடியலைன்றதுக்காக எல்லாத்தையும் கேன்ஸல் பண்றதா..?? எப்படி இவனால இப்படிலாம் நெனைக்க முடியுது..?? சனியன் புடிச்சவன்.. ‘இன்னைக்கு தண்ணி இல்லையா’ன்னு அபசகுனம் புடிச்ச மாதிரி கேட்டுக்கிட்டு இருக்குறான்..??”

ஹரி பேச பேசவே அசோக்கிற்கு அவன் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவனை அப்படியே எரித்துவிடுவது போல உஷ்ணமாக பார்த்தான். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, பற்களை கடித்தவாறே சொன்னான்.

“த்தா.. ரெண்டு பெரும் என் கண்ணு முன்னாடியே நிக்காதீங்கடா.. நான் கொலைகாரன் ஆகுறதுக்குள்ள இங்க இருந்து ஓடிப் போயிடுங்க..!!”

சொல்லிவிட்டு தன் சிஸ்டம் பக்கமாய் திரும்பி, கீ போர்டை படபடவென தட்டினான். அசோக்கின் பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். ஆனால் அவன் மனதில் இருக்கும் கோபத்தின் அளவை இன்னும் அறிந்து கொள்ளாதவனாய்..

“என்ன மாப்ள.. இதுக்குபோய் இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? இப்போ என்ன.. உன்னால குடிக்க முடியலை.. அவ்ளோதான..?? கவலையை விடு.. உனக்கும் சேர்த்து நான் இன்னைக்கு குடிச்சுடுறேன்.. ஓகேவா..??”

கேட்டுவிட்டு ஹரி இளிக்க, அசோக் அதற்கு மேலும் தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டென திரும்பி ஹரியை சேரோடு எட்டி உதைத்தான். அவன் நிலை தடுமாறிப்போய் தனது டேபிள் மீது சரிந்து, மானிட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

அத்தியாயம் 11

a-2

அந்த வாரத்தில் ஒருநாள்.. அதிகாலைப்பனி சூழ்ந்த பெங்களூரில்.. குளிருக்கு நடுங்கிக்கொண்டே பஸ்ஸில் இருந்து குதித்தாள்.. செண்பக லக்ஷ்மி.. செல்வியின் தங்கை..!!!! அவள் பெங்களூர் வருவது அசோக்கிற்கு முன்பே தெரியாது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவன், காபிக்காக கிச்சனுக்கு தூக்க கலக்கத்துடனே நடந்து சென்றபோதுதான், டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லி விழுங்கிக்கொண்டிருந்த செண்பகம் கண்ணில் பட்டாள். திடீரென அவளை பார்த்ததும் ஓரிரு வினாடிகள் ஆச்சரியத்தில் திகைத்த அசோக், அப்புறம்..

“ஹாய் செம்பு..!!” என்றான் ஆச்சரியமும் தூக்க கலக்கமும் கலந்த மாதிரியான குரலிலேயே. சிறு வயதிலிருந்தே அவன் அவளை செம்பு என்று அழைப்பதுதான் வழக்கம்.

“ஹாய் மாமா..!!” என்றாள் அவளும் இட்லியை விழுங்கி விட்டு. சிறு வயதிலிருந்தே அவள் அவனை மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.

“எப்போ வந்த..??”

“இப்ப்ப்.. ஜஸ்ஸ்.. ஒப்ப்.. அக்க்க்க்…” அதற்குள் அவள் அடுத்த இட்லியை வாயில் தள்ளியிருக்க, அவளிடமிருந்து வார்த்தைகள் இப்போது தெளிவில்லாமல் வெளியே வந்து விழுந்தன.

“என்ன.. சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்திருக்குற..??”

அசோக்கின் இந்தக் கேள்விக்காவது தெளிவாக பதில் சொல்லிவிடவேண்டும் என்று, செண்பகம் வாயில் இருந்த இட்லியை அவசர அவசரமாய் அரைத்து விழுங்கினாள். அவள் படுகிற அவஸ்தையை காண சகியாத அசோக்,

“சரி சரி.. நீ சாப்பிடு.. அப்புறம் பேசிக்கலாம்..!!”

என்று சலிப்பாக சொல்லிவிட்டு, மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே.. சட்டியின் மூடியை திறந்து இட்லியின் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. இவன் வழக்கமாக விழிக்கும் நேரமும், விழித்ததும் நேராக கிச்சனுக்குத்தான் காபிக்கு வருவான் என்பதும் அவளுக்கு முன்பே தெரியும். அதனால் காபி கலந்து தயாராக எடுத்து வைத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே எந்த உணர்ச்சியும் காட்டாமல், காபி டம்ளர் எடுத்து அவனிடம் நீட்டினாள். டம்ளரை கையில் வாங்கிய அசோக், காபியை உறிஞ்சாமல், கண்களை மட்டும் ஒரு ஓரத்திற்கு தள்ளி அண்ணியை குறுகுறுவென பார்த்தபடியே, கம்மலான குரலில் கேட்டான்.

“எப்போ வந்தா..??”

“இப்போத்தான்.. ஒரு மணி நேரம் ஆச்சு..!!” செல்வி வேலை கவனத்துடனே பதிலளித்தாள்.

“ஓஹோ..!!”

சொன்ன அசோக் இப்போது தலையை மெல்ல நீட்டி வெளியே எட்டிப்பார்த்தான். இட்லியை சட்னியில் தொட்டு லபக்கென்று தொண்டைக்குள் போடுகிற செண்பகத்தின் மீது எரிச்சலாய் ஒரு பார்வையை வீசினான். இவர்கள் இங்கிருந்து பேசுவது அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையுடன், இந்தப்பக்கம் திரும்பி சற்றே கிண்டலான குரலில் செல்வியிடம் சொன்னான்.

“வந்ததும் வராததுமா.. தட்டு நெறைய இட்லியை போட்டு.. கவக்கு கவக்குன்னு கவ்விக்கிட்டு இருக்குறா..!! உடம்பை கொறைக்கிற மாதிரி ஐடியாவே இல்லையா உங்க தங்கச்சிக்கு..??” அசோக் கேட்க, செல்வி அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“உன் கொள்ளிக்கண்ணை கொண்டு போய் வேறெங்கயாச்சும் வை.. என் தங்கச்சி மேல வைக்காத..!!”

“ஹாஹா.. இல்லன்னாலும்..!! ம்ம்ம்ம்.. என்ன விஷயமா வந்திருக்குறா..??”

“இன்டர்வ்யூக்கு..!!”

“ஓ..!! எந்த கம்பெனில..??”

“உங்க கம்பெனிலதான்..!!” செல்வி இயல்பாக சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“எங்க கம்பெனிலயா..?? நான்தான் அவ பயோ டேட்டா ஃபார்வர்ட் பண்ணவே இல்லையே..??”

“ஏன்..?? நீ இல்லைன்னா என்ன.. அவளுக்கு வேற ஆளே கெடைக்காதா..??”

செல்வி சொன்னதில் ஒரு உள்க்குத்து இருந்தது. ஆனால் அசோக் அதையெல்லாம் கவனிக்கவில்லை. நெற்றியை சுருக்கியவாறு சற்றே ஆர்வமாக கேட்டான்.

“நான் இல்லன்னா.. வேற யாரு ஃபார்வர்ட் பண்ணினது..??”

“யாரோ.. அவ கூட படிச்ச பையனாம்..!! அவன் மூலமா அப்ளிகேஷன் அனுப்பிருக்கா.. அவங்களும் இன்டர்வ்யூக்கு வர சொல்லிருக்காங்க.. கெளம்பி வந்திருக்குறா..!! இன்டர்வ்யூ போயிட்டு.. இன்னைக்கு நைட்டே கெளம்பி திரும்ப சென்னை போயிடுவா..!! போதுமா..??”

“ஹ்ம்ம்ம்.. ஒருவேளை அவளுக்கு..” அசோக் இழுத்துக்கொண்டிருக்கும்போதே, அவன் கேட்க வந்ததை செல்வி புரிந்து கொண்டாள்.

“வேலை கெடைச்சுட்டா எங்க தங்குவா..?? அதான..??”

“ம்ம்ம்ம்..!!”

“அதெல்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம் சாமி.. அவ வெளிலயே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..!!”

அசோக் இப்போது அமைதியானான். நெற்றியை கீறிக்கொண்டு சிலவினாடிகள் யோசித்தான். ‘எப்படியும் இந்த சோத்து சட்டிக்கு நம்ம கம்பனில வேலை கெடைக்கிறதே கஷ்டம்.. அப்படியே ஒருவேளை கெடைச்சாலும்.. வெளில தங்கிக்க போறா.. எப்பயாச்சும் வீட்டுக்கு வருவா.. வந்துட்டு போறா.. வேறெந்த ப்ராப்ளமும் இவளால வர்றதுக்கு சான்ஸ் இல்ல..!!’ – இந்த மாதிரி அவன் மனதில் தோன்றியதும் சற்றே நிம்மதி அடைந்தான். இருந்தாலும் மனதின் ஓரமாய் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை, இப்போது சற்றே நக்கலான குரலில் அண்ணியிடம் கேட்டான்.

“ஹ்ம்ம்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வேற எதுவும் ப்ளான் பண்ணலைல..??” அசோக்கின் நக்கலில் செல்விக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

“ஏண்டா.. கொழுப்பா உனக்கு..?? நான் ஏதோ அறிவில்லாம ஒருநா.. ‘என் தங்கச்சியை கட்டிக்கிறியா’ன்னு கேட்டுட்டேன்.. அதுக்காக என்ன வேணா பேசுவியா நீ..??”

“ப்ச்.. இப்ப என்ன பேசிட்டேன்னு இப்டி டென்ஷனாகுறீங்க.??”

“பின்ன என்ன.. இப்போ எதுக்கு தேவை இல்லாம.. அவளையும் சேர்த்து இதுல இழுக்குற..?? எனக்குத்தான் அந்த ஐடியா இருந்தது.. அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஒரு நெனைப்பே இல்ல.. போதுமா..??”

படபடவென்று பேசிய செல்வி, சட்டியை திறந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து ஹாட்பாக்சுக்குள் போட்டாள். அசோக் மீது இருந்த எரிச்சலில் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.

Comments

Scroll To Top