கூடலையே நாடினேன் – 3

(Tamil Kamakathaikal - Koodalaiyae Naadinen 3)

Raja 2014-04-12 Comments

Tamil Kamakathaikal – தோட்டத்திலிருந்து. . அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன் ..! கை கால் முகம் கழுவி… அம்மா கொடுத்த ராகிவடையையும். .. காபியையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது… நீ வந்தாய்.!!!
சாயம்போன பழைய .. ஆரஞ்சு தாவணியில் இருந்தாய்.!!
” எனக்கு டிபன் கெடையாதா ?” எனச் சிரித்தவாறு கேட்டாய்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

10

”எங்கம்மாளக் கேளு… ” என்றேன்.
” ஏன். . நீங்க தந்தா என்னவாம்?”
” எனக்கு அவ்ளோ தாராள மனசு இல்லை. . ”
” ஒரு வார்த்தைக்காவது… ? ”
” அந்த வார்த்தைக்கு இந்த எடத்துல அவசியமில்ல.. ”
சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாய். ஏனோ பெருமூச்சு விட்டாய்.
” எனக்கு நீங்க பதிலே சொல்லல.. ” என்றாய்.சன்னக் குரலில்.
” அதான் சொல்லிட்டேனே.. ”
” ஐயோ. . இதில்ல.. முந்தாநாள் நான் சொன்னேனே… ? ” என என்னை ஆவலுடன் பார்த்தாய்.
” என்னது….? ”
” ஐ லவ் யூ…? ”
” அப்படின்னா… ? ” எந்த வித உணர்ச்சி பாவமும் இல்லாமல் கேட்டேன்.
என்னை உற்றுப் பார்த்தாய். உள்ளே திரும்பி என்அம்மா வேலையாக இருப்பதைக் கவனித்து விட்டு. . மருபடி என்னைப் பார்த்தாய்.!
” உங்களக் காதலிக்கறேன்னு அர்த்தம். ” என்றாய்.
” அப்படியா… ? ”
” உங்கள நான் புரிஞ்சிக்காம போனதுக்காக இப்ப பீல் பண்றேன் நந்தா. உங்கள நான் ரொம்பமே அவாய்ட் பண்ணியிருக்கேன்.அதெல்லாம் நெனச்சா எனக்கே என்மேல கோபம் கோபமா வருது… ” என வருந்தும் குரலில் சொன்னாய்.
நான் காபி குடித்தவாறு… அமைதியாக உன்னையே பார்த்தேன்.!
மிகவும் மெல்லிய குரலில் நமக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாய்.!
” சின்ன வயசுல இருந்தே உங்கள எனக்கு ரொம்பப் புடிக்கும் நந்தா. ஆனா ஏனோ அத நான் வெளிப்படுத்த முடியாமயே போயிருச்சு… வெளிப்படுத்தியிருப்பேன்.. நீங்களும். .. எங்கக்காளும். . அந்த மாதிரி ஒரு இதுல இல்லாம இருந்திருந்தா… ! அன்னிக்கு நீங்க. .. ரெண்டு பேரும் அப்படி இருந்ததப் பாத்ததும்.. உங்கமேல அப்படியொரு ஆத்திரம் வந்துருச்சு எனக்கு. .! அந்த கோபத்துலதான் உங்கள அவ்ளோ மோசமாவெல்லாம் பேசிட்டேன்… ஸாரி. .. ”
எவ்வளவு அழகாக.. உன்பக்கம் நியாயம் கோர்க்கிறாய்.. ? நீ இப்படியெல்லாம் பேசுவதால். நீ செய்த காரியங்கள் எல்லாம் இல்லையென்றாகி விடுமா.. ?
இல்லை கடந்த காலங்களில் அணுபவித்த.. வேதணைகள்தான் பொய்யாகி விடுமா.. ?
இல்லை.. ! எதுவுமே மாறப்போவதில்லை.!!!
அமைதியாக நான் குடித்து முடித்த காபி டம்ளரைக் கீழே வைக்க. …
” என் வீட்டுக்கு வாங்களேன் ” என்றாய்.
” எதுக்கு. .. ? ”
” அங்க யாருமே இல்ல. .. உங்ககிட்ட இன்னும் எவ்வளவோ மனசுவிட்டுப் பேசணும். . வாங்களேன் ப்ளீஸ்”
நான் ஒண்றும் பதில் தரவில்லை. சிறிது நேரம் மௌனம் நிலவியது. பின்னர் நான் எழுந்து. . வெளியே போய் நின்றேன்.
என் பின்னாலேயே நீயும் வந்தாய் ! என் அருகில் வந்து நின்று…
”நான் உங்கள ரொம்ப ஆழமா நேசிக்கறேன் ” என்றாய்.
” நேசம். .. ” நான் சிரித்தேன். ”நீ என்னை நேசிக்கற… ? ”
” சத்தியமா நந்தா. .. ”
” இதை நான் நம்பனும். . ? ”
ஒரு பெருமூச்சுடன் ” உங்க கோபம் புரியுது. .. ஆனா… ”
நான் இடைமறித்துச் சொன்னேன்.
” நீ.. வேற ஆள் பாத்துக்கோ கீதா. . அதான் நல்லது.. ”
” நான் ஒண்ணும் ஆளு தேடி அலையல .. ! ஒரு தடவ பட்டதே போதும். உங்கள விட்டா.. இன்னொருத்தன என்னால் உண்மையா லவ் பண்ண முடியாது.. ”
” வேஸ்ட்.. ” சிறிது இடைவெளிவிட்டுச் சொன்னேன் ” இது காதல் இல்ல கீதா. . ! உன்னோட ஏமாந்து போன மனசுக்கு.. இது ஒரு மாற்று வழி…! நீ . காதலிச்சவன் உன்ன ஏமாத்திட்டாங்கறதுனால இப்ப உன் மனசு என் பக்கம் திரும்பியிருக்கு.! இப்ப உன்னச் சுத்திவர்றதுக்கும்.. உன் அழக புகழ்றதுக்கும். .. உன்னக் கொஞ்சறதுக்கும் ஆள் இல்ல. . அதான் ஆள் தேடற… ? என்னால இனி உன்ன லவ் பண்ண முடியாது. .! என்னை மறந்துரு.. ” எனக்குள் இருந்த கசப்பு. .வெறுப்பையெல்லாம் தூண்டி விட்டுவிட்டாய். என் தொண்டையை இருக்கிப் பிடித்து .. மூச்சுத் திணறடிப்பது போல உணர்ந்தேன். ! அதற்கு மேல் .. என்னால் அங்கு நிற்க முடியாமல் விலகி…வீட்டிற்குள் போய்விட்டேன்.!!!

என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. அவளை ஆஸ்பத்ரி அழைத்துப் போனேன்! மருந்து.. மாத்திரைகள் எழுதிக் கொடுத்த டாக்டர். . அம்மாவுக்கு ஓய்வு தேவை என்றார்.! அம்மாவை அழைத்துப் போய்… என் அக்கா வீட்டில் விட்டேன்.!
” சாப்பிட இங்கயே வந்துர்ரா.. அம்மா நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். .. ” என்றாள் என் அக்கா குமுதா. !!!
நான் வீட்டுக்கு வந்ததும் என்னிடம் முதலில் கேட்டவள் நீதான். . !
” உங்கம்மாக்கு எப்படி இருக்கு?”
” ம்… தேவலை… ”
” இப்ப எங்க. .. ? ”
”குமுதா வீட்ல.. ”
” என்ன ஒடம்புக்கு. . ? ”
” வயசாய்டிச்சில்ல.. ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிரும்”
” நீங்க ஒரு கல்யாணம் பண்ணிட்டா உங்கம்மாக்கு. . நல்லாவே ரெஸ்ட் கெடைக்கும்” எனச் சிரித்தாய்.
உன்னை முறைத்த என்னை நீ..பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.!
” உங்களுக்கொரு குட் நியூஸ் ” என்றாய்.
” தேவையில்லே.. ” என்றதும் நீ.. அமைதியாகிப் போனாய்.!!

அன்று மாலை… !!
தோட்டத்திலிருந்து வீடு திரும்பிய நான். . பைக்கை நிறுத்தி இறங்க…
உன் வீட்டுக் கதவு திறந்து. . வெளியே வந்தாள் உன் அக்கா.
” ஹேய்… தடியா..” என்று சிரித்தாள்.!
திகைத்துப் பின் சிரித்தேன்.
” ஹேய்.. ரம். .. ! நீ எப்ப வந்த? ”
” நான் வர்றப்ப நீ இல்ல. . உங்கம்மாவ ஆஸ்பத்ரி கூட்டிட்டு போயிருக்கேனு கீதா சொன்னா.. என்னடா.. அம்மா ஒடம்புக்கு. .. ? ”
” நத்திங் டூ.. வொர்ரி..! குமுதா வீட்ல இருக்காங்க.. ! மருபடி நான் வந்தனே வீட்டுக்கு. . ? ”
” ! ஓ… ! அப்ப நான் பத்மா வீட்ல இருந்தேன்.”
” நீ… மட்டும்தான் வந்தியா.. ?”
” ரெண்டு பேருமதான் வந்தோம்… ஆனா. . அவரு போய்ட்டாரு.. ”
” ஏன்.. ? ”
” எனக்கு. . லைட் பீவர்.! அவரும் ஒரு வேலையா வெளியூர் போறாரு… ! அதான் இங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாரு.. ”
” ஓ… ! எத்தனை நாள் இருப்ப?”
” மினிமம் டூ டேஸ்.”
எங்கள் பேச்சைக் கேட்டு நீயும் வெளியில் வந்து நின்றாய்.
என்னைப் பார்த்துச் சொன்னாய்.
” உங்களுக்கு ஒரு குட் நியூஸ்னு சொன்னேனில்ல.. அது இவ வந்ததுதான். நான் சொல்ல நெனச்சேன் நீங்கதான் வேண்டாம்ன்ட்டீங்க.. ”
பொதுவாகப் பேசிவிட்டு. .. பாத்ரூம் போய் சின்னதாக ஒரு குளியல் போட்டு..விட்டு வந்து வெளியே.. கிளம்பினேன். !
மறுநாள். ..!!!
நான் மதிய உணவைக் குமுதா வீட்டில் சாப்பிட்டு விட்டு. . என் வீட்டிற்குப் போனபோது.. உன் வீட்டில் தையல் மிஷின் ஓடிக்கொண்டிருந்தது. நீதான் தைத்துக் கொண்டிருந்தாய். என்னைப் பார்த்ததும் சிரித்தாய்.
” ரம்யா இல்ல. .. ?” நான்.
” உள்ள. . வாங்க… ”
” ரம்யா இருக்காளா.. இல்லையா.. ?”
” அவளேதான் வேணுமா. . ?”
” ஆமா. . எங்க அவ.. ?”
” என்னத்துக்கு… அவ.. ?”

Comments

Scroll To Top