ஐ ஹேட் யூ பட் – 29

(Latest Tamil Sex Stories - I Love U But 29)

Raja 2013-10-27 Comments

Latest Tamil Sex Stories – “உங்களுக்குலாம் என்னாச்சு இன்னைக்கு.. நிம்மதியா ஒரு ஃபோன் கூட பேச விட மாட்டேன்றிங்க..?? கால் பண்றவங்க நம்ம ஃபேமிலியை பத்தி என்ன நெனைப்பாங்க..??”

“பார்டா.. ஃபேமிலியை பத்தி பெருசா அக்கறையாலாம் பேசுது புள்ள..?? இவருக்கே எந்த அக்கறையும் கெடையாதாம்.. இவுக அடுத்தவுகளை சொல்ல வந்துட்டாக..!!” செல்வி கிண்டலாக சொன்னாள்.

“ஏன்..?? எனக்கு என்ன அக்கறை இல்ல..??”

“அக்கறை இருக்குறவனா இருந்தா.. இப்படி நாங்க பாத்த பொண்ணை வேணாம்னு சொல்லிருப்பியா..??” செல்வி கேட்க, இப்போது செண்பகம் அசோக்கின் சப்போர்ட்டுக்கு வந்தாள்.

“அக்கா.. என்னக்கா இது..?? மாமாவை ஏன் தேவை இல்லாம திட்டுற..?? கல்யாணம்ன்றது அவங்கவங்க இஷ்டப்படி நடக்கணும்.. எதுக்கு எல்லாருமா சேந்து அவரை கம்பல் பண்றீங்க..??”

“அடிப்போடி அறிவு கெட்ட சிறுக்கி.. இவன் அடிக்கிற கூத்துலாம் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது.. நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!!” என்று தங்கையிடம் எகிறினாள் செல்வி. அசோக் இப்போது செண்பகத்திடம் திரும்பி சொன்னான்.

“விடு செம்பு.. இதுகளுக்குலாம் ஒன்னும் புரியாது..!! சாப்பிட்டல நீ.. கெளம்பு.. ஆபீசுக்கு லேட்டாயிடுச்சு.. நான் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்துடுறேன்..!!” சொல்லிவிட்டு அசோக் தனது அறையை நோக்கி நடக்க, ராஜேஷ் இப்போது கடுப்பாகி கத்தினான்.

“டேய்.. இப்படி எந்த முடிவும் சொல்லாம போனா.. என்னடா அர்த்தம்..??”

“என் முடிவை அப்போவே சொல்லிட்டேன்.. நீங்க பாத்த பொண்ணை என்னால கட்டிக்க முடியாது.. முடியாது.. முடியவே முடியாது..!! எனக்கு வரப்போறவளை நானே சூஸ் பண்ணிக்கிறேன்..!!”

என்று அசோக்கும் பதிலுக்கு கத்தினான். தனது அறைக்குள் நுழைந்து, கதவை ஆத்திரமாக அறைந்து சாத்தினான்.

அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்திலேயே.. ராஜேஷும் செல்வியும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்க.. அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். செண்பகம் பின்னால் ஏறிக்கொள்ள, அசோக் மனதில் இருந்த கோபத்தை கிக்கரிடம் காட்டினான். உதைக்கப்பட்ட வேகத்திலேயே பைக் சீறிப்பாய ஆரம்பித்தது. செண்பகம் மிரண்டு போய் அசோக்கின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

வீட்டில் நடந்த ரகளை பற்றியே எண்ணிக்கொண்டு கொஞ்ச நேரம் பைக்கை விரட்டிய அசோக்கிற்கு, அப்புறம் மெல்ல ப்ரியாவின் ஞாபகம் வந்தது. உடனே மனதில் ஒரு இதமான உணர்வு பரவியது. ‘எதற்காக கால் செய்தாள்..?? என்றும் இல்லாத அதிசயமாய் இன்று காலையிலேயே..?? அதுவும் ஹஸ்கியான அந்த ஹலோவிலேயே என்ன ஒரு ரொமாண்டிக் ஃபீல்..?? ச்சே.. வீட்ல இருக்குற ரெண்டு சனியன்களும் சேந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சுங்க..!!’

அசோக் அந்த மாதிரி குழம்பிக்கொண்டே பைக்கை விரட்டிய அதே நேரம்.. கம்பனி பஸ்ஸின் ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த ப்ரியா.. ஆபீசுக்கு சென்றதும் அசோக்கிடம் அவள் பேசப்போகிற காதல் மொழிகளை.. இப்போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.. வெட்கப்பட்டு தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்..!!

அத்தியாயம் 18

காதல் வயப்படுதல் யாருக்கும் எளிதுதான்..!! ‘எனக்கு சொந்தமான உயிர்’ என்கிற மாதிரியான உணர்வு கிளம்புகிறார்போல.. எதிர்பாலர் ஒருவரை கண்டுவிட்டால்.. உள்ளம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது..!! இனி மீதம் உள்ள வாழ்க்கையை இவருடன் கழித்தால்.. இன்பத்தில் தினம் திளைக்கலாமே என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறது..!! அவ்வாறு கனவு காணுதலை போல.. அந்த காதலை உரைத்தல் அவ்வளவு எளிதல்ல..!! மனதில் உள்ள காதலை உரியவரிடம் உரைக்கவே.. ஒரு முரட்டு தைரியமோ.. அல்லது ஒரு அசட்டு தைரியமோ வேண்டும்..!!

காதலை சொல்லும் தைரியம் மட்டுமே அந்த காதலின் வெற்றிக்கு போதாது.. அதை சொல்லுகிற விதமும் மிக மிக முக்கியம்..!! முறைப்படி உரைக்க தவறிய காதலர்களால்.. முறிந்து போன காதல்களும் நிறைய உண்டு..!!

தனது காதலை அசோக்கிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தைரியம் ப்ரியாவுக்கு வந்திருந்தது.. அதை சொல்கிற விதம் பற்றிதான் இப்போது அவளது கவலை இருந்தது..!! ஆபீசுக்கு வந்து அசோக்கிற்காக காத்திருந்தவள்.. கைப்பை திறந்து கண்ணாடி எடுத்து.. அதில் தனது முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.. நெற்றியில் வந்து விழுந்திருந்த ஒற்றை கூந்தல் கற்றையை ஓரமாக ஒதுக்கி விட்டாள்..!! உபயோகிக்கப் போகிற வார்த்தைகளை சற்றே உற்று ஆராய்ந்தாள்.. ‘மனசுன்னு சொல்லலாமா.. இதயம்னு சொல்லலாமா..?? எது எஃபக்டிவா இருக்கும்..??’

இது மட்டுமில்லாமல்.. தான் சொல்லப்போகும் செய்தி கேட்டு அசோக் எந்த மாதிரி எதிர்வினை புரிவானோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது..!! ‘அவனுக்கும் எனக்கும் ஆறு வருட அறிமுகமாய் இருக்கலாம்.. சண்டையிட்டிருந்தாலும் கூட ‘சாப்பிட்டியா..??’ என்று கேட்கிற கனிவை என் மீது அவன் காட்டியிருக்கலாம்.. எங்கள் குடும்பத்தினர் இப்போது எங்கள் இருவரையும் இணைத்துவைக்க எடுத்திருக்கும் முடிவறிந்து ஆச்சரியமுறலாம்..!! ஆனால்.. அதற்காகவெல்லாம் அவன் என் காதலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லையே.. அவனுக்கும் கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்க வேண்டுமே.. தோழியாக பார்த்தவளை காதலியாக பார்க்க முடியாது என்று அவன் சொல்லிவிட்டால்..??’

இந்த மாதிரி இதயத்தில் ஒரு படபடப்புடனே ப்ரியா அசோக்கிற்காக காத்திருந்தாள்..!! தனது கண்ணாடி அறைக்குள் இருந்தவாறே.. அவன் வந்துவிட்டானா என்று அவ்வப்போது தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

ப்ரியாவின் இதயம் படபடப்பில் சிக்கியிருந்தது என்றால்.. அசோக்கின் இதயம் எதிர்பார்ப்பில் மூழ்கி கிடந்தது..!! ‘எதை சொல்ல என்னை காலையிலேயே கைபேசியில் அழைத்தாள்..?? எப்போதும் போல் இல்லாமல்.. அவளுடைய குரலில் இன்று ஒரு மாற்றம் தெரிந்ததே.. என்ன அது..??’ அந்த மாதிரி ஒரு சிந்தனையுடனே அசோக் ஆபீஸ் வந்து சேர்ந்தான்..!! அவன் ஆத்திரத்தில் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்ட செண்பகமும் அதிகம் பேசி அவனை தொந்தரவு செய்யவில்லை. அவள் அவ்வப்போது கேட்ட கேள்விகளுக்கும் அசோக் அசிரத்தையாகவே பதில் சொல்லிக்கொண்டு வந்தான்..!!

தாங்கள் பணி செய்யும் தளத்திற்குள் நுழைந்த அசோக்.. உடன் வருகிற செண்பகத்தை கண்டுகொள்ளாமலே.. அவசரமாக நடந்து தனது இடம் சென்று அமர்ந்தான்..!! கணினி திறந்தான்.. கம்யூனிகேட்டர் நுழைந்து முதல் வேலையாக ப்ரியாவிற்கு ‘ஹாய் ப்ரியா..’ என்று பிங்கினான்..!! அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான்.. உடனே பதில் வந்தது..!!

a0

“ஹாய் அசோக்..!!”

பதில் வந்தது கம்யூனிகேட்டரில் இருந்து அல்ல.. அவன் காதுக்கருகே இருந்து..!! அவன் வந்ததை உள்ளிருந்தே கவனித்திருந்த ப்ரியா, தனது அறையை விட்டு எழுந்து வந்திருந்தாள்.. இவன் கம்யூனிகேடரில் ஹாய் சொல்ல.. அவள் இவனுக்கு பின்பக்கமாக அந்து ஹாய் சொன்னாள்..!! எழுத்தில் பதில் வரும் என்று எண்ணி.. திரையை வெறித்திருந்த அசோக்.. குரலில் பதில் வந்ததும்.. கூடவே ப்ரியாவின் மேனி நறுமணம் கலந்து வந்ததும்.. படக்கென தலையை திருப்பி பார்த்தான்..!!

திரும்பி பார்த்தவன் ஒருகணம் திகைத்துப் போனான்.. வியப்பில் அவனது விழிகள் விரிந்து கொண்டன..!! காதலில் மனம் விழுந்து விட்டால், காதலி முகம் கண்களுக்கு அழகாய் தெரிவது இயல்புதான்..!! ஆனால்.. அதையும் தாண்டி ப்ரியா இன்று தேவதை போல ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது..!! அவளுடைய அசத்துகிற அழகு அவனது கண்களை வன்மையாக தாக்க.. அவன் தனது சுவாசத்தை இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!!

“வா..வ்..!!” என்று திணறலாக வாய் பிளந்தான்.

“என்ன வாவ்..??” ப்ரியா குரலில் குறும்புடன் கண்களை சிமிட்டியவாறே கேட்டாள்.

“யூ.. யூ லுக் ஆவ்சம் டுடே..!!!”

“நெஜமா..???”

“சத்தியமா..!! என்னன்னு சொல்லத்தெரியல.. ஆ..ஆனா.. ரொம்ம்ம்ப அழகா இருக்குற இன்னைக்கு..!!”

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ்..!!”

“அப்புறம்.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..??”

“ஒ..ஒன்னும் இல்லையே.. ஏன் கேக்குற..??”

“இல்ல.. புதுசா.. புடவைலாம் கட்டிக்கிட்டு ஆபீஸ் வந்திருக்கியே.. அதான் ஏதாவது விஷேஷமான்னு..”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. சும்மாதான்..!!”

“ஹ்ம்ம்.. காலைலேயே கால் பண்ணிருந்த போல..??” அசோக் இயல்பாக கேட்க, ப்ரியா இப்போது சற்றே தடுமாற்றமாய் சொன்னாள்.

“ஆ..ஆமாம்.. அதுக்குத்தான் இப்போ வந்தேன்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..!!”

“ம்ம்.. பேசு..!!” அசோக்கின் குறும்பான குரலில் சொன்னதற்கு, ப்ரியா உதடுகள் பிரித்து புன்னகைத்தாள்.

“ஹாஹா.. இங்க இல்ல..!!”

“அப்புறம்..??”

“தனியா..!!”

ப்ரியா அந்த ‘தனியா..!!’விற்காக, குரலில் ஒரு கிறக்கத்தையும், கண்களில் ஒருவித மின்னலையும் தனியாக சேர்த்துக்கொண்டு சொல்ல.. அசோக்கின் இதயம் படக்கென்று சொடுக்கிவிடப்பட்டது..!! அவளுடைய முகத்தையே வியப்பாக பார்த்தான். ப்ரியா இப்போது அசோக்கின் புஜத்தில் மெலிதாக இரண்டு தட்டு தட்டியவாறே, ‘வா..’ என்றுவிட்டு முன்னால் நடந்தாள். அவள் அவ்வாறு அங்கிருந்து நகர்ந்த பின்னர்தான், அசோக் அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த சுவாசத்தை சுதந்திரமாக வெளியிட்டான். இமைகளை ஒருமுறை நிம்மதியாக மூடி திறந்தான். பிறகு சேரில் இருந்து எழுந்து அவசரமாய் அவளை பின்தொடர்ந்தான்.

Comments

Scroll To Top