ஆண்மை தவறேல் – 19

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 19)

Raja 2013-12-01 Comments

“அ..அது எதுக்கு இப்போ.. வேணாம் விடு..”

“பரவால.. சொல்லுங்க..”

“ஐயோ.. அந்த விஷயம் பெரிய ஐயாவுக்கு கூட தெரியாது.. யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு அசோக்கு என்கிட்டே சொல்லி வச்சிருக்கு..”

“ஓஹோ..?? அப்படியா..?? அப்போ கண்டிப்பா எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. சொல்லுங்க..!!”

“வே..வேணாம் நந்தினிம்மா..”

“ம்ஹூம்.. நான் விடமாட்டேன்..”

“அசோக்குக்கு தெரிஞ்சா வம்பு..”

“பயப்படாதீங்க.. நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன்.. தைரியமா சொல்லுங்க..!!”

கௌரம்மா சொல்லப்போவது தனக்கே ஆப்படிக்கிற விஷயம் என்பதை அறியாத நந்தினி, அவளை கட்டாயப் படுத்தினாள். கொஞ்சம் தயங்கிய கௌரம்மாவும், நந்தினி கட்டாயப்படுத்தவும் அசோக்கிடம் சொல்ல மாட்டேன் என்று உறுதி கொடுக்கவும், பிறகு மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.

“ஸ்கூல் படிக்கிறப்போலாம் ‘எனக்கு ரெண்டு அம்மா.. எனக்கு ரெண்டு அம்மா..’ ன்னு சொல்லிட்டு இருந்த அசோக்கு.. காலேஜ் போனப்புறம் ஒருநாளு.. திடீர்னு எனக்கு ஃபோன் பண்ணி.. ‘உனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு கௌரம்மா.. இனிமே எனக்கு மூணு அம்மா..’ன்னு சந்தோஷமா சொல்லுச்சு..!!”

“ஹாஹா..அது யாரு அந்த மூணாவது அம்மா..??” சிரிப்புடனே கேட்டாள் நந்தினியும், இன்னும் விஷயம் விளங்காதவளாய்.

“யாரோ கூடப் படிச்ச பொண்ணு நந்தினிம்மா.. அசோக்குகிட்ட நல்லா பிரியமா பேசிருக்குது.. இல்ல இல்ல.. அப்படி கூட சொல்ல கூடாது.. பிரியமா இருக்குற மாதிரி நடிச்சிருக்குது.. அசோக்கும் அந்த நடிப்பை நம்பி ஏமாந்து.. அந்தப் பொண்ணை விரும்ப ஆரம்பிச்சுடுச்சு.. அவதான் நம்ம பொண்டாட்டின்னு மனசுக்குள்ள ஆசையை வளத்துக்க ஆரம்பிச்சுடுச்சு..”

கௌரம்மா சொல்ல சொல்ல, நந்தினிக்கு இப்போது சுரீர் என்று இருந்தது. ‘இவள் சொல்லும் அந்தப்பெண் நானா..??’ அவளுடைய உள்மனம் கேட்ட கேள்விக்கு, அவளுடைய மூளை ஆமாம் என்று தலையாட்ட, அவளுக்கு இப்போது அந்த சூழ்நிலை அவஸ்தையாக மாறிப் போனது. ஏண்டா இவளிடம் கேட்டோம் என்பது மாதிரி திருதிருவென விழித்தாள். கௌரம்மாவோ நந்தினியின் முகமாற்றத்தை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினாள்.

“அப்போ கொஞ்ச நாள்.. அசோக்கு ஃபோன்ல எங்கிட்ட பேசுறப்போலாம்.. அந்தப்பொண்ணை பத்தியே பேசிட்டு இருக்கும்.. அவ அப்படி அவ இப்படின்னு.. ‘செத்துப்போன அம்மா உயிரோட வந்துட்ட மாதிரி இருக்கு கௌரம்மா..’ன்னு சொல்லும்.. அப்படின்னா எந்த அளவுக்கு அந்த பொண்ணு மேல உயிரையே வச்சிருந்துருக்கும்னு பாத்துக்கோ..!!”

நந்தினிக்கு இப்போது அவளுடைய இதயத்தை ஏதோ ஒன்று துளைத்து, ஒருவித வேதனையை ஒவ்வொரு அணுவிலும் செலுத்துகிற மாதிரியான ஒரு உணர்வு. அசோக் ஒருகாலத்தில் தன்னை காதலித்தான் என்பது அவளுக்கு தெரிந்த சேதிதான். ஆனால் எந்த அளவுக்கு காதலித்தான் என்பது இப்போது அவளது புத்தியில் பலமாக உறைக்க, அவளுடைய உடல் ஒருமாதிரி சிலிர்த்துக் கொண்டது. கைவிரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன.

“அந்தப்பொண்ணை பத்தி அசோக்கு பேசுறப்போலாம் எனக்கே கொஞ்சம் கடுப்பா இருக்கும்.. யாரோ ஒருத்தி நம்ம அம்மா பொசிஷனுக்கு போட்டியா வர்றாளேன்னு ஒரு பொறாமை.. மாமியார், மருமக நடுவுல ஒரு போட்டி இருக்குமே.. அந்த மாதிரி..!! ஹாஹாஹாஹா.. இப்போ நெனச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு..!! கொஞ்ச நாள் அசோக்கு என்னை பொறாமை பட வச்சுடுச்சுன்னு அதைத்தான் சொன்னேன்..!!”

“ம்ம்ம்..!! அப்புறம் அந்த பொண்ணு என்ன ஆனா..?” நந்தினி குறுகுறுப்புடன் கேட்டாள்.

“அசோக்குக்கு காலேஜு கடைசி நாளு.. அந்தப்பொண்ணோட வேஷம் கலைஞ்சு போயிடுச்சு..!! அசோக்கு அதுக்கு மொத நாளு என்கிட்டே ஃபோன்ல பேசுறப்போ கூட.. ‘நாளைக்கு அந்த பொண்ணு முடிவு சொல்றேன்னு சொல்லிருக்கு.. கண்டிப்பா ஒத்துப்பான்னு நெனக்கிறேன்..’னு ரொம்ப நம்பிக்கையா சொல்லுச்சு..!! ஆனா.. அந்தப்பொண்ணு அந்த நம்பிக்கையை உடைச்சுடுச்சு.. அசோக்கை வேணாம்னு சொல்லிடுச்சு..!! அசோக்குக்கு வெவரம் தெரிஞ்சு அது அழுது நான் பாத்ததே இல்ல நந்தினிம்மா.. காலேஜ்ல இருந்து திரும்பி வந்த அன்னைக்கு அசோக்கு என் மடில படுத்து அழுதுச்சு பாரு.. அப்படி ஒரு அழுகை.. தேம்பி தேம்பி..!! அதை பாத்த எனக்கு ஈரக்கொலை அப்படி துடிச்சுச்சு..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறந்தான் அப்பாவிப் புள்ளையா இருந்த அசோக்கு நெறைய மாறிப்போச்சு..!!”

கௌரம்மா கவலையுடன் சொல்லிமுடிக்க, நந்தினி என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி கொந்தளிப்புக்கு உள்ளானாள். அவளை பற்றி நினைக்க அவளுக்கே வெறுப்பாக இருந்தது. ஒரு அன்புள்ளத்தை புரிந்துகொள்ளாது.. அறிவில்லாமல் நான் அள்ளி வீசிய அமில வார்த்தைகள்.. ஒரு ஆண்மகனை எந்த அளவிற்கு மாற்றியிருக்கிறது..?? அவனுடைய வாழ்க்கையை எந்த அளவிற்கு புரட்டிப் போட்டிருக்கிறது..?? ச்சே.. அனைத்திற்கும் நானே அடிப்படை காரணமாகி விட்டேனே..??

நந்தினி அவ்வாறு தன்னைத்தானே திட்டிக் கொண்டிருக்கும்போதுதான், கௌரம்மா திடீரென ஞாபகம் வந்தவளாய் உற்சாகமான குரலில் நந்தினியிடம் கேட்டாள்.

“ஏம்மா.. நீயும் அசோக்கும் ஒரே காலேஜுல படிச்சவங்கதான..?”

“ஆ..ஆமாம்..” சொல்லும்போதே நந்தினியிடம் ஒரு உதறல்.

“அடச்சே.. இத்தனை நாளா இதை கேக்கனும்னு எனக்கு தோணலை பாரு..”

“எ..எதை..??”

“உனக்கு அந்தப்பொண்ணு யார்னு தெரியுமா..??”

“இ..இல்லைங்க.. எ..எனக்கு தெரியாது..” நந்தினி திணறலாக சொன்னாள்.

“ஃபோட்டோ பாத்தா கண்டு புடிச்சுடுவியா..??”

“ஃபோட்டோவா..????” நந்தினி இப்போது விழிகள் விரித்து அதிர்ந்தாள்.

“ஆமாம்மா.. அசோக்கு அந்த பொண்ணோட காலேஜுல எடுத்த ஃபோட்டோவை இன்னும் வச்சிருக்கு.. அப்பப்போ எப்போவாவது அதை எடுத்து எடுத்து பாத்துட்டு உக்காந்திருக்கும்..!! அந்த போட்டோவை பாத்தா.. அந்தப்பொண்ணு யாருன்னு உன்னால கண்டு பிடிக்க முடியுமா..??” கௌரம்மா கேட்க, நந்தினிக்கு மயக்கம் வராத குறைதான்.

“ஃபோட்டோலாமா வ..ச்சிருக்காரு..?”

“அட நெஜமாத்தான்..!! வா.. நான் உனக்கு அந்த பொண்ணு ஃபோட்டோவை காட்டுறேன்..”

“ஐயோ.. இ..இல்லைங்க.. வேணாம்..” நந்தினி இப்போது பேக் அடித்தாள். கௌரம்மா அவளை விடவில்லை.

“அட வாம்மா.. பரவால.. இவ்வளவு சொல்லிட்டேன்.. இனிமே அந்த ஃபோட்டோவையும் காட்டுறதுல எனக்கு என்ன இருக்கு..??”

சொன்ன கௌரம்மா நந்தினியின் கையைப் பற்றி உள்ளறைக்குள் அழைத்து சென்றாள். நந்தினியின் இதயமோ ‘படக்.. படக்..’ என்று அடித்துக்கொள்ள அவளை பின்தொடர்ந்தாள். ‘இது என்னடா வம்பா போச்சு..?? இவள் அப்போதே வேணாம் என்றாள்.. அத்துடன் விட்டிருக்கலாமோ..?? தேவையில்லாமல் இவளை கட்டாயப்படுத்தி.. இப்போது பார்..!! ஆமாம்.. இவள் அந்த போட்டோவை ஏற்கனவே பார்த்திருப்பாளா..?? பார்த்திருந்தால் அப்புறம் எப்படி என்னை இவளுக்கு அடையாளம் தெரியவில்லை..?? அடையாளம் காட்ட என்னை ஏன் அழைத்து செல்கிறாள்..?? ஒருவேளை சில வருடங்களுக்கு முன்பு இவள் பார்த்து.. இப்போது என் முகம் மறந்து போயிருக்குமோ..?? ஐயையோ..!! அப்படி மட்டும் இருந்தால்.. இப்போது இவள் அந்த ஃபோட்டோவை பார்த்ததும் பளிச்சென்று கண்டுகொள்வாளே..?? நான்தான் அந்த அடங்காப்பிடாரி என்று எல்லோருக்கும் தெரிந்துவிடுமே..?? ‘ஐயோ.. கடன்காரா.. ஏண்டா என் ஃபோட்டோவை எல்லாம் இன்னும் வைத்துக்கொண்டு திரிகிறாய்..?’ என கணவனை திட்டினாள். Sunni Oombum Tamil Kamakathaikal

– தொடரும்

ஆண்மை தவறேல் – 19

What did you think of this story??

Comments

Scroll To Top