நெஞ்சோடு கலந்திடு – 25

(Tamil Sex Story - Nenjodu Kalanthidu 25)

Raja 2014-01-25 Comments

கார்த்திக்கின் பாடுதான் ரொம்ப கஷ்டம்..!! வீட்டில் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன என்று அவனால் உணர முடிந்தது. ஆனால் அது என்ன என்று சுத்தமாக அவனுக்கு விளங்கவில்லை. திவ்யாவும், அசோக்கும் திடீரென எலியும் பூனையுமாய் மாறிப்போனது ஏனென்று அவனுக்கு புரியவில்லை. அசோக்கிடமோ, தங்கையிடமோ அதுபற்றி கேட்டால்.. அவர்கள் கடித்து குதறி விடுவார்கள் என்று பயம்..!! மனைவியிடம் கேட்டால், அவளோ ‘உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்..?’ என்று யாரோ மூன்றாம் மனுஷனிடம் சொல்வது போல முகத்திலறைந்த மாதிரி சொன்னாள்.

அப்புறம் ஒரு பத்து நாட்களுக்கு மேற்சொன்ன நிலைதான்..!! அந்த பத்து நாட்களில் திவ்யாவிடம் பேசாமல் அசோக்கிற்கு பைத்தியம் பிடித்தாற்போல இருந்தது. திவ்யா தன்னை காதலிக்க வேண்டாம்.. தன்னை புரிந்துகொண்டு தன்னுடன் வந்து பேசிவிட மாட்டாளா என்றே ஏங்கினான்..!!

அவர்களது பிரிவு அசோக் அளவிற்கு திவ்யாவை பாதிக்கவில்லை என்றாலும், அவளும் அசோக்கின் இன்மையை உணராமல் இல்லை. அவள் பார்க்கும் பொருட்கள் எல்லாம், செல்லும் இடங்கள் எல்லாம் அவளுக்கு அசோக்கை நினைவு படுத்த தவறவில்லை. முதல் நாள் அசோக் எதிர்ப்பட்டபோது அவனை அருவருப்பாய் பார்த்து விரட்டினாள் எனினும், அடுத்த நாள் அதே நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டபோது, அசோக்காக இருக்குமோ என்று தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து ஏமாந்தாள். ‘ஏன்டா அசோக் இப்படி பண்ணின.. ஏன்..? போடா..!!’ என்று மனதுக்குள்ளேயே அசோக்கை அடிக்கடி திட்டிக்கொண்டாள்.

அசோக்கும் திவ்யாவும் பிரிந்த பதினோராம் நாள்.. மாலை ஐந்து மணி..!!

திவாகர் அந்த அகலமான, ஆள்நடமாட்டமற்ற சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். திவ்யாவுடைய கல்லூரி அவனுக்கு இடப்புறமாக கடந்து சென்றது. கல்லூரியை தாண்டியதும், காரின் வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டான். மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டே, சாலையின் இடப்புறமாக பார்வையை வீசிக்கொண்டே சென்றான். ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் அவ்வாறு கடந்ததும், தூரத்தில் ஒரு மரநிழலில் நின்றுகொண்டிருந்த திவ்யா கண்ணுக்கு அகப்பட்டாள்.

அவள் முன்பாக ஒரு மாருதி ஆல்ட்டோ நின்று கொண்டிருந்தது. இவன் அந்த காரை நெருங்க நெருங்கவே அந்த கார் கிளம்பி வேகமெடுத்து பறந்தது. திவ்யா முதலில் திவாகரின் காரை கவனிக்கவில்லை. கிளம்பிய காரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எதேச்சையாக திரும்பி திவாகரின் காரை பார்த்தவள், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அவளுடைய உதட்டில் உடனடியாய் ஒரு செயற்கை புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. கதவு திறந்து காருக்குள் ஏறிக் கொண்டாள்.

“யார் அது திவ்யா..?” திவாகர் ஆர்வமாய் கேட்டான்.

“எது..??”

“அந்த கார்ல..?”

“ஓ.. அதுவா..? அ..அவ.. என் க்ளாஸ்மேட்..!!”

“என்னவாம்..?”

“ஏண்டி இங்க தனியா நிக்குறேன்னு கேட்டா.. பிரண்டுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேன்.. போயிட்டா.. அவ்ளோதான்..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! ம்ம்ம்.. கெளம்பலாமா..?”

“ம்ம்..”

திவாகர் கியர் மாற்றி காரை கிளப்பினான். கழட்டியிருந்த குளிர் கண்ணாடியை மீண்டும் கண்ணுக்கு கொடுத்துவிட்டு, ஸ்டியரிங்கை வளைத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பெரிய ஷாப்பிங் மால் முன்பாக கார் நின்றது. அது ஐந்து அடுக்குகள் கொண்ட, அரைவட்ட வடிவில் கட்டப்பட்ட ஷாப்பிங் மால்..!! சென்னையில் மிகவும் பிசியான அந்த சாலையில், ஆடம்பரமாய் முளைத்திருந்தது.

அந்த ஷாப்பிங் மாலின் கீழ்த்தளத்தில், கட்டிடத்துக்கு மையமாக ஒரு ஃபவுன்டைன்.. மேல் நோக்கி சரம் சரமாய் நீர் துப்பிக் கொண்டிருந்தது..!! அதை சுற்றி வெண்ணிற டேபிள்களும், டேபிளுக்கு நான்கு சிவப்பு நிற நாற்காலிகளுமாய் போடப்பட்டு.. அந்த திறந்த வெளி உணவகம்..!! வடக்கிந்திய சாட் உணவகம்..!! அங்குதான் திவ்யாவும் திவாகரும் சென்றார்கள்..!! ஃபவுன்டைன் அருகிலேயே ஒரு டேபிள் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். இருவரும் அமைதியாக மெனு கார்ட் புரட்டினார்கள்.

“டூ ப்ரெட் ரோல்.. ஒன் ஆலு டிக்கி.. டூ நிம்பு பானி..!!”

திவாகர் பேரரிடம் ஆர்டர் செய்ய, அவ்வளவு நேரம் மெனுகார்ட் புரட்டிய திவ்யா ஏமாற்றமாய் அவனுடைய முகத்தை ஏறிட்டாள். ‘என்ன சாப்பிடுகிறாய்..?’ என்று தனது விருப்பத்தை அவன் கேட்கவில்லையே என்ற ஏமாற்றம் அது..!! அசோக்கும் அவளும் தனியாக ரெஸ்டாரன்ட் சென்ற நினைவுகள், இப்போது ஏனோ பட்டென்று அவள் உள்ளத்தில் வந்து அலை அலையாய் மோதின..!!

“ப்ச்.. சைட் அடிக்கிறதுக்குத்தான் ரெஸ்டாரன்ட் வர்றியா நீ..? ஜொள்ளு வுட்டது போதும்.. இந்தப்பக்கம் திரும்பு..!!” திவ்யா அசோக்கின் தலையில் குட்டுவாள்.

“ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ… விட மாட்டியே நீ.. வில்லி..!!” அசோக் உச்சந்தலையை தேய்த்து விட்டுக் கொள்வான்.

“நான் ரோட்டியும், பன்னீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் பண்ணப் போறேன்டா.. உனக்கு என்ன வேணும்..??”

“ஆமாம்.. நான் என்ன ஆர்டர் பண்ணினாலும், கடைசில நீதான் அதையும் சேர்த்து நல்லா மொக்கப் போற.. ஏதோ ஒன்னு நீயே ஆர்டர் பண்ணித்தொலை..!!” என்று சலிப்பாக சொல்பவன், அடுத்த நொடியே

“ஹேய் திவ்யா.. அந்த பச்சை சல்வாரை பாரேன்..” என்று உற்சாகமாவான்.

‘என்னை காதலிக்கிறான் என்று நான் கொஞ்சம் கூட உணர முடியாதவாறு.. எப்படி எல்லாம் நடித்து ஏமாற்றிவிட்டான்..??’ திவ்யா பழைய நினைவு கலைந்து மீண்டாள். இப்போது திவாகர் திவ்யாவிடம் திரும்பினான். திவாகருக்கு திவ்யாவுடைய ஏமாற்றப் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. கேஷுவலாக கேட்டான்.

“ப்ரெட் ரோல் உனக்கு பிடிக்கும்ல திவ்யா..?”

“ம்ம்.. பி..பிடிக்கும்..” திவ்யா பொய் சொன்னாள்.

“ப்ரெட் ரோல்தான் இந்த ரெஸ்டாரன்ட்ல என்னோட ஃபேவரிட் தெரியுமா..?

“ஓ.!!”

“சாப்பிட்டிருக்கியா நீ..?”

“ம்ம்.. சாப்பிட்டிருக்கேன்..!!”

“ஹாஹா.. வேற எங்கயாவாது சாப்பிட்டிருப்ப..? இங்க சாப்பிட்டு பாரு.. அப்படியே அசந்து போயிடுவ..!!” என்று பெருமையாக சொன்னான்.

“இ..இல்ல.. இங்கதான் சாப்பிட்டிருக்கேன்..”

“இங்கயா..? அப்போ.. ஏற்கனவே இந்த ரெஸ்டாரன்ட்க்கு வந்திருக்கியா நீ..??”

“ம்ம்.. நானும் அசோக்கும் இங்க அடிக்கடி வருவோம்..!!”

அவ்வளவுதான்..!! திவாகர் பட்டென டென்ஷன் ஆனான். அவனுடைய புன்னகை முகம் உடனடியாய் ‘உர்ர்ர்..’ என்று இறுக்கமாகிப்போனது. திவ்யாவையே சில வினாடிகள் முறைத்து பார்த்தவன், அப்புறம்

“டேமிட்..!!” என்று கத்தியவாறு டேபிளை ஓங்கி குத்தினான்.

“எ..என்னாச்சு..?” என்றாள் திவ்யா பதற்றமாக.

“கொஞ்ச நேரம் கூட அவனைப் பத்தி பேசாம இருக்க முடியாதா உன்னால..?”

“ஸா..ஸாரி..” திவ்யா மெல்லிய குரலில் சொன்னாள்.

“ப்ச்.. பண்றதையும் பண்ணிட்டு என்ன ஸாரி..??”

“ஏ..ஏதோ வாய்தவறி..”

“வாய் தவறியா..?? பொய் சொல்லாத திவ்யா..!! கொஞ்ச நேரம் முன்னாடி கார்ல வரப்போ.. ‘டி நகர் போக பத்து நிமிஷம் ஆகும்’னு சொன்னா.. ‘இல்லை.. அசோக் கூட பைக்ல போயிருக்கேன்.. அஞ்சு நிமிஷம்தான் ஆகும்’னு சொல்ற..!! ட்ராபிக்ல நிக்கிறப்போ.. ‘நம்ம நாட்டோட பிரச்னைக்கு இந்த பாப்புலேஷன்தான் காரணம்’னு சொன்னா.. ‘ம்ம்.. அசோக் கூட அப்படித்தான் அடிக்கடி சொல்லுவான்’னு சொல்ற..!! அவன் பேரை சொல்லாம.. ஒரு அஞ்சு நிமிஷம்.. உன்னால என்கிட்டே பேச முடியாதா..?? என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற நீ..??”

“ப்ளீஸ்.. விட்ருங்க..” அவளுடைய குரல் இப்போது கெஞ்சலாக ஒலித்தது.

“அவனை உன்னால மறக்க முடியலைல..? எந்த நேரமும் அவன் நெனைப்பாவே இருக்கேல..?”

“ச்சே.. அ..அப்டிலாம் இல்லை.. நாங்க சின்ன வயசுல இருந்தே ஒண்ணா இருந்துட்டோம்.. இ..இப்போ திடீர்னு பேசாம இருக்குறது ஒரு மாதிரி இருக்கு.. வேற ஒன்னும் இல்ல..!! சீக்கிரமே அவனை சுத்தமா மறந்துடுவேன்..!!”

“இங்க பாரு திவ்யா.. அவன் உனக்கும், நம்ம காதலுக்கும் பெரிய துரோகம் செஞ்சவன்..!!”

“ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!”

“நீ அவனைப் பத்தி பேசுறது சுத்தமா எனக்கு புடிக்கலை..!!”

“சரி.. இ..இனி பேசலை.. மன்னிச்சுடுங்க..!!”

“டேமிட்..!! அவன் ஒரு வக்கிரமான புத்தி உள்ளவன்.. அவனைப்போய் இன்னும் நீ நெனைச்சுக்கிட்டு..” திவாகர் கோபமாக சொல்ல, திவ்யா இப்போது நெற்றி சுருக்கினாள்.

“என்ன பேசுறீங்க நீங்க..? அவனுக்கு என்ன வக்கிரமான புத்தி..?”

“நான் தற்கொலை பண்ணிக்க போனப்போ.. நான் சாகட்டும்னு நெனச்சவந்தான அவன் ..? உன் மேல அவனுக்கு இருந்த வெறில.. ஒரு உயிர் போனாக்கூட பரவாலைன்னு நெனச்சவந்தான..?”

“சேச்சே.. அப்படிலாம் அவனை நெனைக்காதீங்க.. ப்ளீஸ்..”

“நான் எங்க நெனைச்சேன்.. நீதான அன்னைக்கு அவனை அப்படி திட்டினதா சொன்ன..?”

“அ..அது.. அது அன்னைக்கு ஏதோ அவன் மேல எனக்கு இருந்த கோவத்துல.. ஒரு அவசரத்துல அப்படி எல்லாம் சொல்லிட்டேன்..!! ஆனா.. என் மனசார நான் அவனை அப்படி நெனைக்கலை..!! அன்னைக்கு நீங்க அவன்கிட்ட ஃபோன்ல பேசுனதை வச்சு.. நீங்க நடிக்கிறீங்கன்னு தப்பா நெனைச்சுட்டான்.. அதான் ஃபோனை கட் பண்ணிட்டான்.. மத்தபடி உங்க உயிர் போகனும்னுலாம் அவன் சத்தியமா நெனைச்சிருக்க மாட்டான்.. அப்படி எல்லாம் அவன் வக்கிர புத்தி புடிச்சவன் இல்ல..!!” Pundai Nakki Edukkum Tamil Sex Story

“ஓஹோ..??”

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 25

What did you think of this story??

Comments

Scroll To Top