ஜெயம் கொண்டான் – 2

(Tamil Kamaveri - Jayamkondan 2)

Raja 2014-07-27 Comments

“அடிங்ங்ங்ங்ங்….!!”

நான் குனிந்து அவனுடைய பட்டெக்ஸில் ஓங்கி ஒரு அறை வைக்க, அவனும் தன் அக்கா மாதிரியே துள்ளி குதித்து, படியிறங்கி ஓடிப் போனான்.

அப்புறம் வந்த இரண்டு வாரங்கள் சுகமாக சென்றன. ஜெயாவுக்கும் என் மீது லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று, அவள் அடிக்கடி வீசிய, ஓரக்கண் பார்வையிலேயே எனக்கு புரிந்து போனது. என்னைப் பார்த்ததுமே எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியாமலே ஒரு வெக்கம் அவளுக்கு வந்துவிடும். டிவியில் ரொமான்டிக்கான காதல் பாடல் வந்தால், மெல்ல தலையை என் பக்கமாக திருப்பி பார்ப்பாள். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது, கேசரியை அள்ளி என் தட்டில் வைத்து, ‘நானே பண்ணினது’ என்று எனக்கு மட்டும் கேக்குமாறு முணுமுணுப்பாள். அடிக்கடி மாடிப்பக்கம் வந்து ‘கீழ காத்தே வரலை.. ஒரே புழுக்கமா இருக்கு…’ அன்று அசடு வழிவாள்.

ஒரு முறை என்னை பஃபலோ என்று சொன்ன தம்பியை தலையில் குட்டினாள். ‘அப்படிலாம் சொல்லக் கூடாது.. அத்தான்னுதான் சொல்லணும்..’ என்று விட்டு ரகசியமாக என்னை பார்த்தாள். நானும் அவளுடைய கண்களைப் பார்த்து காதலாக புன்னகைத்தேன். விஷ்ணு தலையை தடவிக்கொண்டு என்னையும், தன் அக்காவையும் மாறி மாறி முறைத்தான். ‘வர வர.. நீங்க ரெண்டு பெரும் போற போக்கே சரியில்லை…’ என்று கடுப்புடன் முணுமுணுத்தான்.

நானும், ஜெயாவும் அந்த மாதிரி கண்களினாலேயே காதல் மொழி பேசிக்கொண்டாலும், வெளிப்படையாக எங்கள் காதலை சொல்லவில்லை. அல்லது அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டாம் வார இறுதியில் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அன்று எனக்கு விடுமுறை. மதியம் பதினோரு மணி இருக்கும். நான் மாடியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்தேன். ஹாலில் அத்தையும், ஜெயாவும் ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள். அத்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா எதிரே இருந்த டேபிள் மீது, ஒரு பிளேட்டில் காய்கறிகளை வைத்து, நறுக்கிக் கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் ஜெயா அவசரமாக எழுந்து கொண்டாள். ‘வாங்கத்தான்…’ என்றவாறு சேரை எனக்கு விட்டுக் கொடுத்து, பிளேட்டை எடுத்துக் கொண்டு தரையில் போய் அமர்ந்து கொண்டாள். காய்கறி நறுக்குவதை தொடர்ந்தாள். நான் அவ்வப்போது ஓரக்கண்ணால் என் காதல் ராணியை ரசித்துக்கொண்டு, டிவி பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அத்தைதான் திடீரென்று ஆரம்பித்தாள்.

“ஏம்ப்பா அசோக்…!!”

“ம்ம்.. என்னத்தை..?”

“உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்..”

“கேளுங்கத்தை..”

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top