மாங்கல்யம் தந்துனானே – 12

(Tamil Hot Stories - Mangalyam Thanthunanae 12)

Raja 2014-04-16 Comments

12

மூன்று பேரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தோம். டைனிங் டேபிளில் எல்லாம் எடுத்து வைத்தேன். சாம்பார், ரசம், மோர், உருளைக்கிழங்கு பொரியல், பூசணிக்காய் கூட்டு, அப்பளம் என சாதாரண மதிய சமையல்தான்..!! அவர்களை அமர்ந்து சாப்பிட சொல்லிவிட்டு, நான்தான் இருவருக்கும் பரிமாறினேன். கொஞ்ச நேரம் அமைதியாக சாப்பிட்ட ரேணுகா, அப்புறம் அப்பளத்தை கடித்தவாறு ஆரம்பித்தாள்.

“பவி.. உன்னை ரொம்ப நாளா நான் ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்..”

“என்ன..?”

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்டி வீட்டுல உக்காந்து அப்பளம் சுட்டுக்கிட்டு இருக்கப் போற..?”

“அப்புறம்..?”

“MCA படிச்சிருக்கேல..? நீயும் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கலாம்ல..?”

“ஹ்ஹா.. அப்படி என்ன எங்களுக்கு இப்போ பணத்தட்டுப்பாடு வந்துடுச்சு..? ஒருவேளை நாளைப்பின்ன.. அப்டி பணத்தேவை வந்துச்சுனா.. நானும் வேலைக்கு போறேன்..!! அதுவரை அவர் மட்டும் வேலைக்கு போகட்டும்.. நான் அவரையும் வீட்டையும் பாத்துக்குறேன்..”

“அதுக்கில்ல பவி.. உனக்குன்னு ஒரு ஐடென்டிட்டி வேணாமா..?”

“என் ஹஸ்பண்டுக்கு நான் நல்ல வொய்ஃப்னு ஒரு ஐடன்டிட்டி இருந்தா போதும்க்கா எனக்கு..!!”

நான் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க, அசோக் சற்றே பெருமிதமாக என்னைப் பார்த்து புன்னகைத்தார். ரேணுகாவும் புன்னகைத்தாள். ஆனால் அந்த புன்னகையில் இருந்தது பெருமிதமா அல்லது கேலியா என்று எனக்கு புரியவில்லை. நான் முகத்தில் சலனமில்லாமல், அவளுடைய ப்ளேட்டை பார்த்தபடி சொன்னேன்.

“உருளைக்கெழங்கு நல்லாருக்காக்கா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா..?”

“ம்ம்..”

நான் பொரியல் அள்ளி அவளுடைய ப்ளேட்டில் வைக்க, அவள் எடுத்து ருசி பார்த்தாள்.

“நல்லாருக்கு.. ஆனா..” என்று தயங்கினாள்.

“என்ன..?”

“அசோக்குக்கு கொஞ்சம் காரசாரமா இருந்தாதான் புடிக்கும்ல.. இதுல சுத்தமா காரமே இல்ல..?”

“அவருக்கு புடிச்சா.. அப்டியே பண்ணிடனுமா..?” நான் சற்றே எள்ளலான குரலில் கேட்டேன்.

“பின்ன..? புருஷனுக்கு எது பிடிச்சிருக்கோ.. அதை பண்றவதான நல்ல பொண்டாட்டி..??” அவளும் கேலியாகவே கேட்டாள்.

“புருஷனுக்கு எது புடிச்சிருக்குன்றதை விட.. எது நல்லதுன்னு பாத்து பண்றவதான் நல்ல பொண்டாட்டி..!!”

நான் பட்டென அப்படி சொன்னதும், ரேணுகா சற்றே திகைப்பாக என்னைப் பார்த்தாள். அப்புறம் எதுவும் பேச வாய் வராதவளாய், அமைதியாக அப்பளம் கடிக்க ஆரம்பித்தாள். அசோக் இப்போது இன்னும் பெருமிதமாக என்னைப் பார்த்தார். ஒருகையால் சோற்றையும், ஓரக்கண்ணால் என்னையும் விழுங்கியவாறு மெல்லிய குரலில் சொன்னார்.

“காரம் கொறைச்சலா இருந்தாலும்.. டேஸ்ட்ல ஒன்னும் கொறை இல்ல பவி..!!”

இப்போது நானும் அவரை காதலாக பார்த்தேன். கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னேன். அதை பார்த்த ரேணுகா அவரிடம்,

“பார்டா..!! பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டேன்ற..? ம்ம்ம்.. நடத்து நடத்து..!! பவி கொடுத்து வச்சவதான்..!! எனக்கும் ஒருத்தர் வாச்சிருக்காரே.. நான் சமைச்சதை சாப்பிட்டு.. நல்லால்லைன்னு சொல்லக்கூட இதுவரை வாயைத் தெறந்தது இல்ல..!!”

அவள் மறுபடியும் என் அசோக்கோடு அவள் கணவரை கம்பேர் செய்ய.. ‘ம்ம்ஹஹ்ம்ம்.. இவளை திருத்த முடியாது..’ என்று நான் மனதுக்குள் அவளை திட்டினேன். இவள் எப்போதும் இப்படித்தான்.. கொஞ்ச நேரம் கூட வாயை வைத்துக் கொண்டு சும்மா இர இயலாது..!! இந்த மாதிரி என் கணவருடன் அவள் கணவரை ஒப்பிட்டு பேசுவது எனக்கு எரிச்சலையே வரவழைக்கும். அதிலும் அந்த ஒப்பிடுதலில் எப்போதும் என் கணவரையே உயர்வாக அவள் சொல்வது.. எரிச்சலை இருமடங்காக்கும்..!! ‘அசோக்கை இவள் ரசிக்கிறாளோ..? அவர் மாதிரி தன் கணவர் இல்லை என்று எண்ணுகிறாளோ..? அசோக் கிடைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்று ஏங்குகிறாளோ..?’ என என் உள்மனம் என்னென்னவெல்லாமோ எண்ணம் கொண்டு குமையும்..!!

அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.. அந்த மாதிரி பேசுவது என் மனதை எப்படி பாதிக்கும் என்ற அறிவும் இல்லை..!! நாளுக்கு நாள் அவளுடைய பேச்சு என் எரிச்சலை அதிகமாக்கிக் கொண்டே சென்றது. எத்தனை நாள்தான் நானும் பொறுப்பது..? ஒரு நாள் நேரிடையாகவே சொல்லிவிட்டேன்.

அன்று சண்டே.. அசோக்குக்கும் அவளுக்கும் ஆபீஸ் விடுமுறை..!! அதிகாலையிலேயே எழுந்திருந்த அசோக், மேல் ஃப்ளாட் பேச்சிலர் பையன்களுடன்.. எங்கள் அப்பார்ட்மன்ட்சுக்கு எதிரே இருக்கும் அந்த குட்டி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார். நான் முதல் மாடி பால்கனியில் இருந்து என் கணவர் பேட்டிங் செய்யும் அழகை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இவள் வந்து சேர்ந்தாள். அசோக் அடித்த ஷாட் ஒன்றிற்காக, உற்சாகமாக கத்திக்கொண்டே வந்தாள்.

“வாவ்…. ஷாட்…!!!!!!!!!”

வாயெல்லாம் பல்லாக வந்தவளை பார்த்து நான் மெலிதாக புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தவாறு, கையில் இருந்த இரண்டு கப்களில் ஒன்றை என்னிடம் நீட்டிக்கொண்டே சொன்னாள்.

“பால் கொஞ்சம் மிச்சம் இருந்தது பவி.. ரெண்டு காபியா போட்டுட்டேன்.. இந்தா..”

“ஓ.. தேங்க்ஸ்க்கா..!!” நான் வாங்கிக் கொண்டேன். வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சினேன்.

“கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும் பரவாலையா..? அசோக்குக்கு காபி ஸ்ட்ராங்கா இருந்தாதான் புடிக்கும்.. அந்த நெனப்புலேயே போட்டுட்டேன்.. உன் டேஸ்ட் என்னன்னு தெரியலை..!! ஓகேவா..?”

அவள் சொல்ல.. எனக்கு பட்டென்று அவள் மீது எப்போதும் வரும் அந்த எரிச்சல் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. என் புருஷனுக்கு என்ன புடிக்கும்னு இவளுக்கு என்ன அக்கறை..??? ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் சொன்னேன்.

“அவருக்கு என்ன புடிக்குமோ.. அதுதான் எனக்கும் புடிக்கும்..!!”

“தேட்ஸ் நைஸ்..” என்று இளித்தவள், மைதானத்தில் பார்வையை வீசி கொஞ்ச நேரம் கிரிக்கெட் பார்த்தாள். அப்புறம் மீண்டும் ஆரம்பித்தாள்.

“ஹேய்.. பவி.. அசோக் போட்டிருக்குற அந்த டி-ஷர்ட் பாத்தியா..?”

“ம்ம்..”

“நல்லாருக்கா..?”

“ம்ம்.. நல்லாருக்கு.. ஏன்க்கா கேக்குறீங்க..?”

“அது என்னோட சாய்ஸ் தெரியுமா..? நானும் அவனும் போய்தான் அந்த டி-ஷர்ட் எடுத்தோம்..”

அவள் பெருமையாக சொல்ல, அவர் அந்த டி-ஷர்ட்டை கழட்டிப் போட்டதும் முதல் வேலையாக அதை எங்காவது தூரமாக தூக்கிப் போட வேண்டும் என்று நான் மனதுக்குள் முடிவு கட்டினேன். அவளோ என் மனநிலையை உணர்ந்தவளாக தெரியவில்லை. மேலும் எரிச்சல் மூட்டினாள்.

“என் வீட்டுக்காரருக்கு டி-ஷர்ட் போடுறதே புடிக்காது.. ‘போட்டுக்குங்க.. உங்களுக்கு நல்லாருக்கும்’னு.. எவ்ளோ கெஞ்சு.. ம்ஹூம்… முடியாதுன்னா முடியாது..!!”

அவள் சொன்னதைக்கேட்டு நான் புகைந்து கொண்டிருக்கும்போதே, கழுத்து வரை எழும்பி வந்த பந்தை அசோக் மட்டையால் ஓங்கி அறைய.. இவள் கிடந்தது இங்கு துள்ளினாள்.

“வாவ்… சூப்பர் ஷாட்.. இல்ல பவி..?”

“ம்ம்ம்..” என்றேன் நான் பற்களை கடித்துக்கொண்டு.

“அசோக்குக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்ல..? நல்ல இன்ட்ரஸ்ட் இல்ல..?”

“ம்ம்ம்..”

“நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாவும் ஆடுறான்..!!”

“ம்ம்ம்..”

“அசோக்குக்கு கிரிக்கெட் மட்டும் இல்ல.. எல்லா ஸ்போர்ட்சுமே ரொம்ப இன்ட்ரஸ்ட்.. ஸ்போர்ட் பத்தி பேசுனா.. ரெண்டு பேரும் நேரம் போறது தெரியாம பேசிட்டு இருப்போம்..!!”

“ஓஹோ..?”

“ஹ்ஹாஹ்ஹா.. என் ஹஸ்பண்டுக்குத்தான் இதுலலாம் சுத்தமா இன்ட்ரஸ்டே கெடயாது.. ‘வெளையாட்டுலாம் சும்மா வெட்டி வேலை’ன்னு சொல்லுவார்.. நான் தலையில அடிச்சுக்குவேன்..!! அசோக் அந்த வகைல பெஸ்ட்பா..!!”

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் என்னால் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..??? கேட்டு விட வேண்டியதுதான்.. ஆனால் நேரிடையாக, அவள் முகத்தில் அடிப்பது மாதிரி வேண்டாம் என்று தோன்றியது . எரிச்சலை மனதுக்குள் போட்டு அடைத்துக்கொண்டு, முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் கேட்டேன். Chinna Mulai Tamil Hot Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top